Sunday, June 16, 2013

"அறைகூவல்" & "தோலுரித்துக்காட்டுதல்"

அஸ்ஸலாமுஅலைக்கும்,
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

"அறைகூவல்" & "தோலுரித்துக்காட்டுதல்"

இணையத்தில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்தைகள் இவை. பற்று, உறுதி, வீரம் சார்த்த சொல்லாக பயன்படுத்தப்படுகிறது என்று உணர்சிவசப்பட்டேன், பிறகு சிந்தித்ததில் இவ்வார்த்தைகளை பயன்படுத்த என்னிடம் உள்ளது இவைதான்:

"உன்னைவிட நன்மையில் நான் எத்தகையவன் என்று அறைகூவல் விட்டு, என் பாவங்களை தோலுரித்துக்காட்டினால்" இந்த பூமியில் உள்ள இழிபிறவிகளில் நானும் ஒருவனாகி போவேனோ என அஞ்சுகிறேன்.

அல்-குர்ஆண் 26:87 மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே!

அல்-குர்ஆண் 57:21 ஓடுங்கள்; ஒருவரையொருவர் முந்திச் செல்வதற்கு முயலுங்கள்; உங்கள் இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் வானம், பூமியின் அளவிற்கு விசாலமான சுவனத்தை நோக்கியும்! அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக அது தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பேரருள் உடையவனாக இருக்கின்றான்.